நம்முடைய அன்றாட வாழ்வில் செய்யும் பிரயாணங்களின் பொழுது எதிர்ப்படும் கோயில்களை வணங்குவதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளோம்.
ஆழ்ந்த பக்தியினாலோ அல்லது ஒருமுகப்பட்ட நினைவுடனோ இத்தகைய கடவுள் வணக்கத்தை நாம் செய்வதில்லை. ஒரு தற்செயல் நிகழ்வாகவே இது ஏற்படுகிறது.
நம்முடைய வாழ்க்கை பயணத்திலும் இத்தகைய செயல்களில் நாம் ஈடுபடுகிறோம் . ஆன்மீகத்தில் நம்பிக்கை உடையோர் மறுமையை பற்றி நினைக்கும் போதும் பகுத்தறிவாளர்கள் சுய பரிசோதனையின் போதும் தங்களது கடந்த கால செயல்களில் ஏற்பட்ட தவறுகளை பற்றி சிந்திக்கிறோம். அப்பொழுது எடுத்துக்கொள்ளும் உறுதிமொழிகள் நான் முன் பத்தியில் சொன்ன கடவுள் வணக்கத்தால் ஏற்படும் பலன்களையே தரும். நம்முடைய இந்த உலக சூழல் நம்முடைய பயணத்தில் மட்டுமே நம்மை கவனம் கொள்ள செய்கிறது. அதன் பலா பலன்களை நமக்கு உணர்த்தவோ இல்லை உணர்ந்து கொள்ளவோ நாம் முயற்சிப்பது இல்லை.
சிறுது கடினமானாலும் நமது ஒவ்வொரு செயலையும் எண்ணியோ அல்லது செய்த பின் அதன் தாக்கத்தை ஆராய்ந்தோ பார்த்து தவறுகளை திருத்தி கொண்டோமேயானால் ஆத்திகர்கள் மறுமையை பற்றியும் நாத்திகர்கள் மனிததைபற்றியும் கவலை கொள்ள அவசியம் இருக்காது.
எத்தனையோ சூடான விவாதத்துக்குரிய விஷயங்களை அலசும்போது நம்மை பற்றியும் சில நிமிடம் சிந்திப்போம்

1 comment:
please ellaborate on this topic
Post a Comment