Thursday, January 7, 2010

தோழியின் வேண்டுகோளுக்காக தொடர்ச்சி இம்மையும் மறுமையும்

நமது மூதாதையர்கள் பிரசவ வைராக்கியம் மற்றும் மயான வைராக்கியம் எனக் கூறுவார்கள் . மயான வைராக்கியம் என்றால் , ஒருவரின் இறுதி ஊர்வலத்தை கண்ணுறும் பொழுது நாம் இந்த வாழ்வின் நிலையற்ற தன்மையை பற்றி யோசித்து இனி நல்லவைகளை மட்டுமே செய்ய வேண்டும் என உறுதி கொள்வோம். சிறிது நாட்களில் இவ்வுலக சூழலில் நமது இயல்புக்கு மாறிவிடுவோம். இத்தகைய உறுதி மொழிகள் ஒரு தற்காலிக மாற்றமே ஆகும். அவை பயன் தர தொடங்கும் முன் நாம் நமது பழைய நிலைக்கு மாறி விடுவோம்.
ஆகையால் எண்ணி துணிந்து கருமத்தை செய்து அதில் உறுதியாக இருந்தால் இம்மை மட்டுமல்ல மறுமையும் நம் வசமாகும்

1 comment:

Anandi said...

well written,keep writing

Post a Comment