Thursday, January 28, 2010

விழலுக்கு இறைத்தாலும் வீணாவதில்லை நீர்

விழல் எனப்படும் பயனில்லாத ஒன்றிற்காக பாய்ச்சப்படும் நீர் வீணானது என்பது பழமொழி. இதன் உட்கருத்து புரிந்து கொள்ளாதவருக்கு செய்யும் உதவிகள் (அறிவுரை, பொருள் உதவி முதலியவை) வீணானவையே என்பதாகும்.

இந்த கால கட்டத்திற்கு இப்பழமொழி பொருந்துமா? என சிறிது யோசிப்போம்.

வருங்கால தண்ணீர் தேவையை பற்றி யோசிப்பதால் அரசும் , பொது நல இயக்கங்களும் மழை நீர் சேகரிப்பை பற்றி மக்களுக்கு அறிவுறுத்தி சட்டத்தின் மூலம் செயல்படுத்த முனைகிறது.

மழை நீர் சேகரிப்பிற்கு தண்ணீர் எங்கு விழுந்தாலும் அது இறுதியில் மண்ணில் வடிவதற்கு ஏற்பாடு செய்தால் போதும். நிலத்தடி நீர் பலம் பெற்று எதிர் பார்த்த பயனை தரும்.

ஆகையால் நீரை விழலுக்கு இறைத்தாலும் அதன் அடியில் மண் இருப்பதால் அது அன்று இல்லாவிடிலும் என்றாவது ஒரு நாள் பயன் தரும்.



நமது உதவிகளை நீரிற்கும், புரிந்து கொள்ளாதோரை விழலுக்கும், நமக்கு அவர்கள் பால் உள்ள அக்கறையை விழல் விளைந்த மண்ணிற்கும் ஒப்பிடுவோம்.


நாம் சொன்ன நல்லவை அவர்களால் அலட்சியப்படுத்தப்பட்டதே என வருந்த வேண்டாம்

அத்தகைய அறிவுரைகளை கூறுவதன் மூலம் நமது மனமானது பிறர் மீது காட்டும் அக்கறை வெளிப்படுகிறது. மேலும் விசாலமாகிறது. எடுத்து கொள்கிறார்களோ இல்லையோ நமது அறிவுரையின் மூலம் நமது கரிசனமும் , அலட்சியப்படுத்த பட்டாலும் நமது பரிவும் வெளிப்படுகிறது.
இது நமக்கு உள்நிறை எழுச்சியை ( மாரல் பூஸ்டிங் ) நாம் அறியாமலே நமக்கு அளிக்கிறது.

விழலுக்கு இல்லாவிட்டாலும் அதன் உள் அமைந்த மணல் பெறுகின்ற பயன் போல, நமது அன்பின் , அருமையை பிறர் அறியாத போதும் , அறிந்து கொள்ள முற்படாத போதும், அவை வீணாகாமல் முடிவாக அந்த அறிவுரையின் மூல காரணமான அக்கறையை வெளிப்படுத்திய நமது மனதிற்கு உரமாகி ,மன நிறைவை நம்மை அறியாமலே நமக்கு தரும் என்பதால்

நமது பரிவிற்கு அணைபோடாமல் அதை அடைவோரை வகைப்படுத்துவோம்.

எனவே மீண்டும் உறுதியுடன் கூறுகிறேன்

விழலுக்கு இறைத்தாலும் வீணாவதில்லை நீர்

இறைத்துக்கொண்டே இருப்போம் இயன்ற வரை

என்றும் உங்களுடன்
அன்பன் முகுந்தன்









1 comment:

Anandi said...

உண்மைதான்...
நல்ல முயற்சி.

Post a Comment