நகரத்தில் பிறந்து , படித்து, வளர்ந்து வாழ்க்கை நடத்தி வரும் ஒரு இளைஞன் சொந்த வேலை காரணமாக முதல் முறையாக ஒரு அக்மார்க் தமிழ் கிராமத்திற்கு சென்றான்.
சினிமாவிலும், கதைகளிலும் மட்டுமே கிராமத்தை பற்றி கண்டும், கேட்டும் இருந்தான். கிராமத்தை பற்றிய பொதுவான ஒரு எண்ணம் மட்டுமே அவனிடம் இருந்தது.
அவன் பார்த்தவை எவையும் அவனுக்கு புதிதாக இல்லை. நகரத்தில் சுலபமாக செய்யக்கூடிய சமையல், துணி துவைத்தல், நீர் இறைத்தல் முதலியவை மிகவும் கடினமாக செய்ய வேண்டி இருப்பதை கண்டு நகரத்தின் பால் பெருமிதம் கொண்டான்.
கிராமத்து மக்கள் எதையும் ஆழ்ந்தோ,தொலைநோக்குடனோ செய்வதில்லை என்ற எண்ணம் அவனுள் மேலோங்கி இருந்தது. மேலும் அவர்கள் கடைபிடிக்கும் பழக்கவழக்கங்களால் நன்மை ஆன போதும் அவர்கள் காரணம் அறியாமல் முன்னோர் வாக்கின்படி அவற்றை செய்வது அவனை ஏளனமாக சிரிக்க வைத்தது.
நகரின் வாசனை இல்லாமல் அவர்கள் வாழ்வதை பார்த்து அவன் பரிதாபப்பட்டான்.
ஒரு நாள் வாக்கிங் செல்வதற்காக ஊர் எல்லை வரை சென்றான். மிகவும் நடந்ததால் களைப்படைந்து உட்கார ஏதாவது இடம் இருக்குமா என பார்த்தான் .
அருகில் ஒரு மரமும் , அதை ஒட்டி இரு கற்கள் நடப்பட்டு அவை இரண்டிற்கும் மேல் சம தளமாய் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது. அதில் சென்று அமரலாம் என அருகில் சென்று பார்த்தான். மேலே உள்ள கல் அவன் மார்பின் உயரத்திற்கு இருந்தது.
வழக்கம் போல் கிராமத்தவர்கள் முன் யோசனை இல்லாதவர்கள் , ஒரு கல் இருக்கையை கூட ஒழுங்கான உயரம் பார்த்து வைக்க தெரியாதவர்கள் என கேலியாக எண்ணிகொண்டான்.
அப்பொழுது ஒரு பெண் தலை நிறைந்த சுமையுடன் அவ்வழியே வந்தாள் அந்த கல்லினை நெருங்கியவள் , தலை சுமையை மிக எளிதாக அந்த கல்லின் மீது வைத்தாள்.
அந்தப்பெண்மணியின் அந்த செய்கை அந்த இளைஞனுக்கு பொட்டில் அறைந்தாற்போல் இருந்தது. தான் பயனற்றது என நினைத்தது உண்மையில் எதிர்பார்த்ததை விட அதிகம் பயன் உள்ளது என்ற உண்மையும், மெத்த படித்த தன்னால் உணரமுடியவில்லையே என வெட்கப்பட்டான்.
நமது மூதாதையர்கள் ஆழ்ந்த அறிவுடனும் , தன்னலமில்லாமலும் ஒவ்வொரு செயலையும் சிந்தித்து செய்திருக்கின்றனர் என்பது அவனுக்கு அப்பொழுதுதான் உரைத்தது.
அக்கல்லினை சுமைதாங்கி என அழைப்பார்கள். இறந்தவர்களின் நினைவாக அவர்களின் உறவினர்கள் வழிப்போக்கர்களுக்கு உதவ வேண்டி அமைப்பார்கள்.
நாமும் நமது வாழ்கையில் , நமது அறிவினை மட்டுமே மேலானது , மறுக்க இயலாதது என்ற எண்ணத்துடன் அடுத்தவர் வாழ்க்கையில் ஆலோசனை வழங்குகிறோம்.
தலை சுமை இல்லாதவர்க்கு சுமைதாங்கியின் உபயோகம் அறியமாட்டார்கள் . சுமை உள்ளவர்கள் மட்டுமே அதன் சுகம் அறிவர்.
நாமும் நமது வாழ்கையில் நமக்கு தெரியாதவற்றை பயனற்றது என ஒதுக்குகின்றோம். நமக்கு பரிச்சயமில்லை என்பதால் மட்டும் எதுவும் உபயோகமற்றதாகாது.
ஆகையால் நாமும் பிறரின் சொந்த விஷயங்களில் ஆலோசனை என்ற பெயரில் குறிக்கிடும் போது நமக்கு ஏற்புடையதை ஒட்டி ஆலோசனை வழங்காமல் , ஒரு வழிமுறை நமக்கு புதிதானதாக இருந்தாலும் பயனுள்ளதா என ஆராய்ந்து அவ்வழிமுறை அவர்களுக்கு பயன் தரும் எனில் பழகுதல் நலம்.
பிறருக்கு உதவ நினைப்பதே மனிதத்தன்மையின் அடிப்படை. அந்த உதவியையும் அவர்களின் சுமை அறிந்து அதற்கான சுமைதாங்கி எது என்பதை நாம் முதலில் உணர்ந்து பிறகு அவர்களுக்கு உணர்தினோமேயானால் , உறவும் வலுப்படும் நம் எண்ணமும் முழுப்பெரும்.
அன்புடன்
கே.டி. எஸ். முகுந்தன்
9884087424
அருகில் ஒரு மரமும் , அதை ஒட்டி இரு கற்கள் நடப்பட்டு அவை இரண்டிற்கும் மேல் சம தளமாய் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது. அதில் சென்று அமரலாம் என அருகில் சென்று பார்த்தான். மேலே உள்ள கல் அவன் மார்பின் உயரத்திற்கு இருந்தது.
வழக்கம் போல் கிராமத்தவர்கள் முன் யோசனை இல்லாதவர்கள் , ஒரு கல் இருக்கையை கூட ஒழுங்கான உயரம் பார்த்து வைக்க தெரியாதவர்கள் என கேலியாக எண்ணிகொண்டான்.
அப்பொழுது ஒரு பெண் தலை நிறைந்த சுமையுடன் அவ்வழியே வந்தாள் அந்த கல்லினை நெருங்கியவள் , தலை சுமையை மிக எளிதாக அந்த கல்லின் மீது வைத்தாள்.
அந்தப்பெண்மணியின் அந்த செய்கை அந்த இளைஞனுக்கு பொட்டில் அறைந்தாற்போல் இருந்தது. தான் பயனற்றது என நினைத்தது உண்மையில் எதிர்பார்த்ததை விட அதிகம் பயன் உள்ளது என்ற உண்மையும், மெத்த படித்த தன்னால் உணரமுடியவில்லையே என வெட்கப்பட்டான்.
நமது மூதாதையர்கள் ஆழ்ந்த அறிவுடனும் , தன்னலமில்லாமலும் ஒவ்வொரு செயலையும் சிந்தித்து செய்திருக்கின்றனர் என்பது அவனுக்கு அப்பொழுதுதான் உரைத்தது.
அக்கல்லினை சுமைதாங்கி என அழைப்பார்கள். இறந்தவர்களின் நினைவாக அவர்களின் உறவினர்கள் வழிப்போக்கர்களுக்கு உதவ வேண்டி அமைப்பார்கள்.
நாமும் நமது வாழ்கையில் , நமது அறிவினை மட்டுமே மேலானது , மறுக்க இயலாதது என்ற எண்ணத்துடன் அடுத்தவர் வாழ்க்கையில் ஆலோசனை வழங்குகிறோம்.
தலை சுமை இல்லாதவர்க்கு சுமைதாங்கியின் உபயோகம் அறியமாட்டார்கள் . சுமை உள்ளவர்கள் மட்டுமே அதன் சுகம் அறிவர்.
நாமும் நமது வாழ்கையில் நமக்கு தெரியாதவற்றை பயனற்றது என ஒதுக்குகின்றோம். நமக்கு பரிச்சயமில்லை என்பதால் மட்டும் எதுவும் உபயோகமற்றதாகாது.
ஆகையால் நாமும் பிறரின் சொந்த விஷயங்களில் ஆலோசனை என்ற பெயரில் குறிக்கிடும் போது நமக்கு ஏற்புடையதை ஒட்டி ஆலோசனை வழங்காமல் , ஒரு வழிமுறை நமக்கு புதிதானதாக இருந்தாலும் பயனுள்ளதா என ஆராய்ந்து அவ்வழிமுறை அவர்களுக்கு பயன் தரும் எனில் பழகுதல் நலம்.
பிறருக்கு உதவ நினைப்பதே மனிதத்தன்மையின் அடிப்படை. அந்த உதவியையும் அவர்களின் சுமை அறிந்து அதற்கான சுமைதாங்கி எது என்பதை நாம் முதலில் உணர்ந்து பிறகு அவர்களுக்கு உணர்தினோமேயானால் , உறவும் வலுப்படும் நம் எண்ணமும் முழுப்பெரும்.
அன்புடன்
கே.டி. எஸ். முகுந்தன்
9884087424

No comments:
Post a Comment