Thursday, July 7, 2011

" ஸ்ரீ சக்ரா" - சில வரிகள்.



சுமார் 52 வாரங்களுக்கு முன் துவங்கப்பட்ட பிரார்த்தனை கிளப். வெற்றிகரமாக தனது முதல் வயதை பூர்த்தி செய்து  இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது .

நோக்கம்  : நமக்கு தெரிந்தோர், புதியவர் யாராய் இருந்தாலும் அவர்களின் கோரிக்கைகாக ஒரு குழுவாக முகம் அறியாதவரானாலும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்வது.

செயலாக்கம்  : ஒவ்வொரு ஞாயிறும் காலை 7 . 30 மணி வரை உறுப்பினர்கள் தாம் முன்வைக்க விரும்பும் பிரார்த்தனை கோரிக்கைகளை ,பெயர் மற்றும் கோரிக்கை ஆகியவற்றை type செய்து (eg: viji - marriage, raju - education, raghu - health recovery) எனது mobile எண்ணிற்கு SMS செய்வார்கள். அது தவிர பொது  நலத்திற்காக ( eg: பருவ மழை வேண்டி, இயற்கை சீற்றம் தணிக்க வேண்டி etc)ஒரு வேண்டுதலும் இருக்கும்.அவை அனைத்தும்  காலை 7.40 மணிக்குள் consolidate செய்யப்பட்டு உறுப்பினர் அனைவருக்கும் SMS செய்யப்படும். இதன் மூலம் ஒவ்வொருவரிடத்திலும் இருந்து வந்த கோரிக்கைகள் அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்படும் . காலை 7 . 50 முதல் 8 .00 மணி வரை உறுப்பினர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தமது இருப்பிடத்திலேயே, தமக்கு விருப்பமான வழிபாட்டு முறையில் வடக்கு திசை நோக்கி அமர்ந்து SMS ல் வந்துள்ள கோரிக்கைகளுக்காக பிரார்த்தனை செய்வார்கள்.

இணைவதற்கான தகுதி: உறுப்பினர்கள் எக்காலத்திலும் தமது  குடும்பத்தினருக்காக prayer request செய்ய கூடாது.

தற்போதய உறுப்பினர் எண்ணிக்கை : 15 குடும்பங்கள்

நாளைய பேராசை : உலகம் முழுதும் இதில் உறுப்பினராகி ,தனிப்பட்ட குடும்பம் எதுவும்  இல்லை , பொது நலன் ஒன்றிற்காக மட்டுமே பிரார்த்தனை  என்று  "வாசுதேவ குடும்பகம் " என்ற அனைவரும் ஓர் குடும்பம் என்னும் நிலை வர வேண்டும்.

"Helping hands are better than praying lips" என தெரிந்த போதும் "Something is better than nothing" என்ற முதுமொழியும் நினைவுக்கு வருவதால் சிறிது முனைப்போடு செயல் படுத்தி வருகிறோம். 

என்றும் அன்புடன்
K.T.S.Mugundan
9884087424