Saturday, April 9, 2011

அவ்வளவு பெரிய தலைவரா இந்த அன்னா ஹசாரே ?

திரு. அன்னா ஹசாரே அவர்களால் அவதியுறும் அரசியல்வாதிகளுக்காக இந்த லிங்கினை காணிக்கையாக்குகிறேன்
http://vainadheyan.blogspot.com/2011/04/blog-post.html

Monday, April 4, 2011

அடுத்தவர் சொத்தை அபகரிக்கிரீர்களா ?


இந்த தலைப்பை பார்த்தவுடன் பிறரின் பணம், பொருள், மனை முதலிய செல்வங்கள் நம்  கண் முன்  தோன்றும். ஆனால் நான் குறிப்பிடும் சொத்து சிறிது வித்யாசமானது. 

பெரும்பாலானவர்களின்  தவறான எண்ணம் எதுவென்றால் , நாம் ஒருவருடன் செலவழிக்கும் நேரம் அதிகமாக, அதிகமாக , நமக்கு அவர் மீது இருக்கும் அன்பு வெளிப்படும் என்பதாகும்.

இவை சூழ்நிலைக்கு சூழ்நிலை மாறுபடும். 


குடும்பத்தாருடன் மாலை நேரங்களிலும், விடுமுறைகளிலும், 

அலுவலகத்தில் ஒரு குறிப்பிட்ட பணி முடிப்பதற்கான சமயங்களிலும் , 

நண்பர்களுடன் ஓய்வு நேரங்களில் இருக்கும்போதும், 

நாம் செலவழிக்கும் நேரம் அதிகமாக , அதிகமாக 
குடும்பத்தார் மற்றும் நண்பர்களிடத்தில் ஒட்டுதலும், 
அலுவகலத்தில் பணியின் மீது ஈடுபாடும் ஏற்படும்.


கீழ்காணும் கேள்விகளுக்கு "ஆமாம்" அல்லது "இல்லை" இவற்றில் தாங்கள் எந்த அணி என பாருங்கள் ?

1  சிறிது அறிமுகமான நண்பரை ஒரு வேலையின் காரணமாக பார்க்க செல்லும் பொழுது , போன வேலை முடிந்தவுடன் திரும்பி விடுவீர்களா?

2 நண்பன் வேலை செய்யும் வெளியூருக்கு சென்று அவனை அலுவலகத்தில் சந்திக்கும் போது நலம் விசாரித்துவிட்டு உடன் திரும்பி விடுவீர்களா?


3  ஏதாவது சுப நிகழ்ச்சிக்கு சென்றவுடன் அவ்வீட்டாரை கண்டு தங்களின் வருகையை பதிவு செய்து நலன் விசாரிப்புகளுக்கு பின்  அவரிடம் மேலும் பேசாமல் மற்ற நண்பர்களுடன் பேசுவீர்களா?

4 முன்னேற்பாட்டின்படி  ஒரு நண்பருடன் சேர்ந்து வெளியே செல்வதற்கு,அவர் வரும்முன் தயாராவீர்களா?


மேற்கண்ட கேள்விகளில் ஏதேனும் ஒன்றிற்கு "இல்லை" என உங்களுக்கு தோன்றினால் மேலும் தொடரவும்.  

ஒவ்வொரு " இல்லை " என்ற பதிலும் தலைப்பில் கண்ட  கேள்விக்கு "ஆமாம் " என்ற பதிலை தரும். 

ஆம். நீங்கள் அடுத்தவர்களின் விலை மதிக்க முடியாத நேரம் என்னும் மிகப்பெரிய சொத்தை தங்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ அபகரிக்கிறீர்கள்

 மேலும் மேலே குறிப்பிட சூழ்நிலைகளில் , நமக்கு தெரிந்தவரானாலும் , நெருங்கியவரானாலும்,   அவர்களை  நிறுத்தி வைக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவர்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்துகிறீர்கள் .

இவை அனைத்தும் சிறிய திருட்டென்று வைத்துக்கொண்டால், கீழ் காணும் வகையை என்னவென்று சொல்வது?

நம்மில் பலர், தமக்கு  பொது மேடைகளில் வாய்ப்பு என்றும் கிடைக்காது என்ற விரக்தியில், செல்லும் இடமெல்லாம், நண்பர் வீடானாலும் சரி, உறவினர் வீடானாலும் சரி, நண்பர்க்கு நண்பர் வீடானாலும் சரி , அந்த இடத்தை பொதுக்கூட்டமாக பாவித்து தமக்கு தெரிந்த அனைத்தையும் ஒரே நாளில் அடுத்தவருக்கு புரிய வைக்க முயற்சிப்பார்கள். 

 இத்தகைய வகையினரை, ஒட்டுமொத்தமாக அனைவரின் நேரத்தையும் கொள்ளை அடிக்கும் கொள்ளைக்காரர் எனக் கொள்ளலாம். 


நமக்கே தெரியாமல், நாம் செய்யும் இந்த களவினை கண்டறிந்து , முதலில் நம்மை திருத்திகொண்டால், 

அடுத்தவர் சொத்தை அபகரிக்காதவர்  ஆவோம். 

என்றும் அன்புடன்
கே.டி.எஸ். முகுந்தன் 
9884087424