Saturday, August 31, 2013

எனது உறவுகள்

வார நாட்களில் office works , business  dealings ,  இன்ன பிற தொழில் சம்பந்தமான அலைக்கழிப்புகள் நம்மை நமக்கே அந்நியமாக்குகிறது. நமக்கே நமக்கான விடுமுறையில் , நம் எண்ணங்களின் சுதந்திரம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருத்த தேவை இல்லாத போது , நமது இனிய பொழுதை நாம்  நம் குடும்ப உறுப்பினர்கள் தவிர ,குறிப்பிட்ட ஒரு சிலருடன் மட்டுமே பகிர்ந்து கொள்ள விரும்புவோம்.  அருகில் இருந்தால் சந்திப்பதின் மூலமும் , தொலைவில் இருந்தால் , atleast  , போன் ,e mail  அல்லது sms  மூலமாவது , உருப்படியான செய்தி ஏதும் இல்லை என்றாலும் நம் நேரத்தை விரும்பி செலவு செய்வோம்.

அத்தகைய நெருங்கிய வட்டத்திற்குள் நிற்பவர்களை தீர்மானிப்பது எது?

அனுபவத்தை போல சிறந்த ஆசான் இல்லை என்பது சிறிய வாக்கியமானாலும் , எவ்வளவு பெரிய உண்மையை உணர்த்துகிறது!

நமது வாழ்வில் நாம் பெரும்  அனுபவங்களே நமக்கு உரியவர்களை தேர்வு செய்ய உதவுகிறது.

பிறப்பினால்  , ரத்த சம்பந்தத்தினால், திருமண பந்தத்தினால் நமக்கு போதும் போதும் என்னும் அளவிற்கு உறவுகளும், உறவினர்களும் கிடைப்பார்கள்.

பள்ளியில், கல்லூரியில்,அலுவலகத்தில்,நமது சுற்றுப்புறத்தில் நண்பர்கள் பலர் கிடைப்பார்கள்.

அத்தனை உறவினரையும், நண்பரையும் நாம் நமது நெருங்கிய வட்டத்தில் வைத்துக் கொள்கிறோமா?

ஒரு சிலர் ! வெறும் ஒரு சிலரையே  நமக்கு துயரத்தில் மருந்தாகவும், தடுமாற்றத்தில் கலங்கரை விளக்காகவும், நமது செயல்களின் விமர்சகர்களாகவும் நமது மனம் அங்கீகரிக்கிறது.

ஒவ்வொருவரின் எதிர்பார்ப்புகளைப் பொறுத்தே அவர்கள் தமது சுற்றத்தை தேர்ந்தெடுக்கும் அளவுகோல் அமைகிறது.

எனது அளவு கோலாக நான் கொள்வது :

1. எனது  துன்பத்தில் எவ்விதமாயினும்  பங்கு கொள்கிறவரை

2. தமது இன்ப நிகழ்வுகளை என்னுடன் மறவாமல் பகிர்ந்து கொள்பவரை .

இவை ஏதும் சட்ட வரையறைக்கு உட்பட்டவை அல்ல. ஆனாலும் நான் எதிர்பார்க்கும் இவற்றை நானும் practice  செய்கிறேன்.

இவற்றினால் எனக்கு பிரியமானவர்களின் பட்டியலை என்னால் தீர்மானிக்க முடிகிறது.

எனது வட்டம் சிறியதாய் இருந்தாலும் அதில் உள்ளவர்கள் என்னை கருத்தில் கொள்பவர்கள் என்பதே எனக்கு போதுமானதாக இருக்கிறது.

அன்புடன்

K.T.S.Mugundan






Tuesday, March 26, 2013

குறையொன்றுமில்லை


அதிகமான சமயங்களில் நமக்கு நாமே கேட்டுக்கொள்ளும் ஒரு முக்கியமான கேள்வி

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது ?

உலகில் நம்மைத்தவிர அனைவரும் நலமாக இருப்பதாகவும் நாம் மட்டும் அனைத்து துன்பங்களையும் ஒரு சேர அனுபவிப்பது போலவும் பெரும்பான்மையானோர் எண்ணிக்கொள்கிறோம் .

அவை பொதுவாக  கீழ்காணும் சில சந்தர்பங்களின் போது நமக்கு தோன்றும்.

1. நமக்கு நெருக்கமானவர் அகால மரணம் அடையும் போது.
2. நாம் பெரிதும் நேசிக்கும் நண்பர்கள் காரணம் கூறாது விலகி செல்லும் போது
3.நமது சக அலுவலர் நம்மை விட மதிக்கப்படும் போது
4.குடும்ப  விழாக்களில் நாம் புறக்கணிக்கப்படும்போது 
5.நமது திறமை அங்கீகரிக்கபடாத போது
6.நமது உண்மையான அன்பை மற்றவர் exploit செய்யும் போது.

இவை அனைத்தும் நமக்கு கவலை அளிக்கும் சம்பவங்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

 இவற்றின் தாக்கம் நீடிக்காத போதும் ,நம்மில் பெரும்பாலானோர் தன்னிலை இழந்து , தமது அதிருப்தியை சொல்லிலும் , செயலிலும்  நம்மை சுற்றி இருப்பவர் மீது செலுத்த தவறுவதில்லை.

இருந்தபோதும் இவை மட்டுமே நமது துன்பத்திற்கும் "எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது ?" என்ற கேள்விக்கும்  காரணமாய் இருந்தால் ,

நமது கவலைகள் அர்த்தமற்றவை.

தலைப்பில் காணும் "குறையொன்றுமில்லை" என்பதே  நமது வாழ்க்கைக்கு  பொருத்தமானதாகும் .

ஏனெனில்

இவைகளே துன்பத்தின் விளிம்பு என்றால் கீழ்காண்பவற்றை என்னவென்று சொல்வது.

1.சிதம்பரம் பத்மினி, வாச்சாத்தி பழங்குடியினர், டெல்லி மாணவி முதற்கொண்டு நாட்டில் பாதிக்கப்பட்ட அனைத்து சகோதரிகளின் வாழ்விலும் ஏற்பட்ட  நிலை .

2.தங்களுக்கு சம்பந்தம் இல்லாத போதும் போர் மற்றும் தீவிரவாதத்தால் உடற்குறை அடைந்தோர் மற்றும் பெற்றோரை இழந்த சிறார்களின் நிலை.

3.வசதியற்றோருக்கு ஏற்படும் விலை உயர்ந்த நோய்கள்

இவர்களது நிலைக்கு இவர்கள் காரணமில்லை என்பதும் , இவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு "ஈடு செய்ய முடியாதது " (Irreparable Loss ) என்பதும்  கசப்பான உண்மை ஆகும்

ஆனாலும் இத்தகைய நிலைக்கு ஆளாவோர் கூட எதிர்த்து , போராடி, சுய இரக்கதிலிருந்து மீண்டு , வாழ்கையை புதிய கோணத்தில் பார்த்து தாமும் தமது வாழ்கையில் " குறையொன்றுமில்லை" என உரத்து சொல்ல முயற்ச்சிக்கும் போது ,

கிடைப்பதற்கு அரிய , சிந்திக்க தெரிந்த மானிட பிறவியை பெற்றுள்ள நாம், வெறும் அற்ப காரணங்களுக்காக தன்னிரக்கத்தில் சிக்கி , உலகிலேயே  பெரும் துன்பம் நமக்கு உள்ளது என எண்ணுவது slow  poison  உண்பதற்கு ஒப்பாகும்.

அதை விடுத்து நாம் நம் potential உணர்ந்து , தன்னிரக்கத்தில் இருந்து விடுபட்டால், நாம் நமக்கு மட்டுமல்ல , உண்மையாக பாதிக்கப்பட்டோருக்கும் உதவிகரமாக இருப்போம்.  .

" குறையொன்றுமில்லை " என்பதுதான் குறை என மகிழ்வுடன் சொல்வோம்.  

அன்பன்
K.T.S.Mugundan
9884087424





Saturday, February 16, 2013

பூனை கட்டப்பட்டிருக்கிறது




ஒரு ஜென் கதை:

ஒரு ஜென் துறவி நாள்தோறும் தனது சீடர்களுக்கு உபதேசம் செய்து வந்தார் . அப்பொழுது ஒரு பூனை குறுக்கும் , நெடுக்குமாக சென்று வந்து கொண்டிருந்தது. இதனால் அவரது  சீடர்களின் கவனம் சிதறியது. உடனே துறவி அந்த பூனையை உபதேசம் முடியும் வரை ஒரு தூணில் கயிறினால் கட்டி வைக்க சொன்னார்.
அது முதல் துறவி உபதேசம் தொடங்கும் முன் சீடர்கள் அந்த பூனையை கட்டி வைக்க தொடங்கினர். உபதேசமும் எந்த ஒரு தடங்கலும் இன்றி நடந்தது.

நாளடைவில் துறவி முக்தி அடைந்தார். அவருக்குப்பின் வேறு ஒரு துறவி உபதேசம் செய்து வந்தார். சிறிது நாளில் அந்த பூனை இறந்தது.

உடன் துறவி தன சீடர்களிடம் , நாளை உபதேசம் தொடங்கும்முன் ஒரு பூனையை தேடி கண்டுபிடித்து கட்டி வைக்கவும். ஏனெனில் உபதேசம் செய்யும் பொழுது ஒரு பூனையை தூணில் கையிற்றால் கட்டி வைப்பது நமது மடத்தின் கோட்பாடு என்றார்.

நாமும் சில பழக்க வழக்கங்களை , காரண காரியம் ஆராயாமல் வழி வழியாக வந்தவை என பின் பற்றி வருகிறோம்.

ஆங்கிலேயர்கள் நமது நாட்டை ஆண்டபோது, நீதித்துறை முழுக்க முழுக்க அவர்களிடத்தில் இருந்தது. அவர்களது முக்கியமான பண்டிகையான கிறிஸ்துமஸ் விழாவின் போதும், மிகுந்த வெப்பம் காரணமாக ஏப்ரல் - மே மாதங்களின் போதும் , அவர்கள் நீதி துறை சார்ந்த அலுவல்களுக்கு விடுமுறை அளித்து தமது நாட்டிற்கு சென்று  வந்தனர்

தற்போது நமது நாட்டில் நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளின் எண்ணிக்கை அனைவரும் அறிந்ததே. இருந்தும் மேற்கூறிய விடுமுறை என்னும் பூனையை நமது சுதந்திரத்திற்கு பிந்தைய அரசுகள் தொடர்ந்து பராமரித்து வருகின்றன.

இதனால் நாட்டையே உலுக்கும் வழக்குகள் , விரைவாக முடிக்கப்படாமல் ,இழுத்தடிக்கப்படுகின்றன.   தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதியாகும். அத்துடன், தண்டனை என்பது நிச்சயமில்லை எனும் போது , தவறுகளின் எண்ணிக்கையும் கூடும்.

நாட்டின் நலன் கருதி, தற்போதுள்ள அரசியல் கட்சிகளோ,ஊடகங்களோ,தன்னார்வ அமைப்புகளோ, இந்த பூனையை  கழற்றி விட முயற்சிக்குமா?

அன்பன்
K.T.S.Mugundan
9884087424