Saturday, August 31, 2013

எனது உறவுகள்

வார நாட்களில் office works , business  dealings ,  இன்ன பிற தொழில் சம்பந்தமான அலைக்கழிப்புகள் நம்மை நமக்கே அந்நியமாக்குகிறது. நமக்கே நமக்கான விடுமுறையில் , நம் எண்ணங்களின் சுதந்திரம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருத்த தேவை இல்லாத போது , நமது இனிய பொழுதை நாம்  நம் குடும்ப உறுப்பினர்கள் தவிர ,குறிப்பிட்ட ஒரு சிலருடன் மட்டுமே பகிர்ந்து கொள்ள விரும்புவோம்.  அருகில் இருந்தால் சந்திப்பதின் மூலமும் , தொலைவில் இருந்தால் , atleast  , போன் ,e mail  அல்லது sms  மூலமாவது , உருப்படியான செய்தி ஏதும் இல்லை என்றாலும் நம் நேரத்தை விரும்பி செலவு செய்வோம்.

அத்தகைய நெருங்கிய வட்டத்திற்குள் நிற்பவர்களை தீர்மானிப்பது எது?

அனுபவத்தை போல சிறந்த ஆசான் இல்லை என்பது சிறிய வாக்கியமானாலும் , எவ்வளவு பெரிய உண்மையை உணர்த்துகிறது!

நமது வாழ்வில் நாம் பெரும்  அனுபவங்களே நமக்கு உரியவர்களை தேர்வு செய்ய உதவுகிறது.

பிறப்பினால்  , ரத்த சம்பந்தத்தினால், திருமண பந்தத்தினால் நமக்கு போதும் போதும் என்னும் அளவிற்கு உறவுகளும், உறவினர்களும் கிடைப்பார்கள்.

பள்ளியில், கல்லூரியில்,அலுவலகத்தில்,நமது சுற்றுப்புறத்தில் நண்பர்கள் பலர் கிடைப்பார்கள்.

அத்தனை உறவினரையும், நண்பரையும் நாம் நமது நெருங்கிய வட்டத்தில் வைத்துக் கொள்கிறோமா?

ஒரு சிலர் ! வெறும் ஒரு சிலரையே  நமக்கு துயரத்தில் மருந்தாகவும், தடுமாற்றத்தில் கலங்கரை விளக்காகவும், நமது செயல்களின் விமர்சகர்களாகவும் நமது மனம் அங்கீகரிக்கிறது.

ஒவ்வொருவரின் எதிர்பார்ப்புகளைப் பொறுத்தே அவர்கள் தமது சுற்றத்தை தேர்ந்தெடுக்கும் அளவுகோல் அமைகிறது.

எனது அளவு கோலாக நான் கொள்வது :

1. எனது  துன்பத்தில் எவ்விதமாயினும்  பங்கு கொள்கிறவரை

2. தமது இன்ப நிகழ்வுகளை என்னுடன் மறவாமல் பகிர்ந்து கொள்பவரை .

இவை ஏதும் சட்ட வரையறைக்கு உட்பட்டவை அல்ல. ஆனாலும் நான் எதிர்பார்க்கும் இவற்றை நானும் practice  செய்கிறேன்.

இவற்றினால் எனக்கு பிரியமானவர்களின் பட்டியலை என்னால் தீர்மானிக்க முடிகிறது.

எனது வட்டம் சிறியதாய் இருந்தாலும் அதில் உள்ளவர்கள் என்னை கருத்தில் கொள்பவர்கள் என்பதே எனக்கு போதுமானதாக இருக்கிறது.

அன்புடன்

K.T.S.Mugundan