ஒரு முறை நாரத மகரிஷிக்கு ஒரு சந்தேகம் வந்தது. அவர் பகவானிடம் , " அனைவரும் மாயை , மாயை என கூறுகிறார்களே , அப்ப்டியென்றால் என்ன ?" என்று கேட்டார் .
உடனே பகவானும், ஒரு குளத்தை காண்பித்து "அதில் ஒரு முறை மூழ்கி எழுந்து வா" என்று கூறினார் .
நாரதரும் உடனே அந்த குளத்தில் மூழ்கினார்.
அதன் பிறகு நடந்தவை.:
நாரதர் பூவுலகில் ஒரு ஆண் குழந்தையாக பிறந்து , வளர்ந்து, மணம் செய்து, எண்ணிலடங்கா குழந்தைகள் பெற்று , துன்புற்று , இறுதியில் வாழ்க்கையை முடித்துக்கொள்ள , ஒரு குளத்தில் குதித்தார்.
மீண்டும் எழுந்த போது, திருமாலின் அருகில் இருப்பதை கண்டார்.
பகவான் சிரிப்புடன் இது வரையில் நீ பூவுலகில் வாழ்ந்ததாக நினைத்துகொண்டிருந்தது தான் "மாயை" எனக் கூறினார்.
இந்த உலக வாழ்க்கையில் சிறிது மட்டுமே மகிழ்ச்சி உள்ளது , பெரும்பாலும் துன்பமே என எந்நாளும் வருந்துவோருக்கு இந்த கதை சிந்தனைக்கு ஒரு கருவாக அமைகிறது அல்லவா ?
இங்கு நாம் சந்திக்கும் அத்தனை சம்பவங்களும் illusion ஆகும். இவை நிரந்தரமானவையோ, நம்மை துன்பப்பட வைக்க கூடிய நோக்கத்திலோ வருபவை அல்ல.
அனைத்திலும் பங்கு பெற்று , ஒரு நாடகத்தின் பகுதியே இவை என சிந்தித்து அனைத்தையும் சரி சமமாக பாவித்தல் வேண்டும்.
ஆகவே நாமும் நமது வாழ்கையும் யாருடைய கனவோ ஆகும் .
நாம் யாருடைய கனவாக இருக்கிறோம் என கண்டறிதல் ,
மிக பெரிய மகான்கள் தேட சொன்ன " நான் யார் ?" என்ற வினாவிற்கு எனக்கு தெரிந்த விளக்கம் ஆகும் .
வணக்கங்களுடன்
K.T.S.Mugundan
