Saturday, April 5, 2014

சிறிது விசாலமாக பார்ப்போம்



திருமாலும் நாரதரும் ஒரு முறை சஞ்சாரம் செய்து கொண்டிருந்தபோது , நாரதர் பகவானிடம் "திருமாலிடம் மிகுந்த பக்தி கொண்டுள்ளவர் யார்?" எனக் கேட்டார்.திருமாலும் ஒரு குடியானவனை சுட்டிக் காட்டினார். மிகுந்த வியப்புடன் நாரதர் அம்மனிதனின் அன்றாட செய்கைகளை கவனித்தார்.

அவன் காலை எழுந்தவுடன் ஒரு முறையும், உணவு உண்ணும்போது ஒரு முறையும் , இரவு தூங்கும் பொழுது ஒரு முறையும் " ஹரி ஹரி " என்று நாரணன் நாமத்தை கூறி வந்தான்.

இதைக்கண்ட நாரதர் புன் சிரிப்புடன் " எப்பொழுதும் தங்கள் நாமத்தை சொல்லும் என்னை விட , மிக மிக குறைந்த முறை சொல்லும் இவன் மிக சிறந்த பக்தனா?" என ஆணவத்துடன் கேட்டார் . உடனே பகவான் ஒரு கிண்ணத்தில் எண்ணெயை நாரதரிடம் கொடுத்து மூவுலகையும் ஒரு முறை எண்ணை  சிறிதளவும் சிந்தாமல் சுற்றி வர வேண்டும். அப்படி வந்தால் உண்மையான பக்தன் யார் என தெரியும் என கூறினார்.

நாரதரும் மிகுந்த கவனத்துடன் மூவுலகையும் சுற்றி வந்தார். வந்தவுடன் பகவானிடம் "தாங்கள் சொன்ன படி ஒரு சொட்டும் விழாமல் சுற்றி வந்து  விட்டேன் . இப்பொழுது சொல்லுங்கள் யார் மிக சிறந்த பக்தர்?" என கேட்டார்.

பெருமாளும் சிரிப்புடன் , "மூவுலகை சுற்றி வந்த போது  எத்தனை முறை என் நாமத்தைக் கூறினாய் ? "என கேட்டார். அப்போதுதான் வேலை கவனத்தில் தான் ஒரு முறை கூட சொல்லவில்லை என நாரதருக்கு உரைத்தது .

பகவான் சிரிப்புடன் , "நீ வேலை இல்லாத போது 1000 முறை கூறியதையும் , வேலையின் பொது என்னை மறந்ததையும்,அந்த குடியானவன் தனது வறுமை மற்றும் வேலை  பளுவிலும் என்னை மறவாமல் எனது பெயரை கூறுவதையும் வைத்து பார்க்கும் போது எது சிறந்த பக்தி என நீயே முடிவு செய்து கொள் "எனக்கூறினார்.

நம்மில் பெரும்பாலோர் ஒரு கூட்டு முயற்சியில் , நாம் தான் மிக அதிக பங்களிப்பு கொடுக்கிறோம் என நமக்கு நாமே ஒரு சபாஷ் போட்டுக்கொள்கிறோம்.

நம்மால் புறக்கணிக்கப்பட்டவர்களையும் கவனத்தில் கொண்டு அவர்களது பங்களிப்பையும் சிறிது கவனத்தில் கொண்டோமேயானால் , நமது உண்மையான நிலை என்பது தெரிய வரும்.

இது ஒரு சிறு Self Analysis தான் முயற்சித்து பாருங்களேன்.

வணக்கங்களுடன்
K.T.S.Mugundan

No comments:

Post a Comment